|
|
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் |
திருத்தணி |
239. அமைவுற் றடைய |
ராகம் - காபி தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
பாடல் |
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் - கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் - தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் - கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் - கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் - புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் - ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் - புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
1 |
240. அரஹரசிவ |
ராகம் - நாதநாமக்ரியா / ஷண்முகப்ரியா தாளம் - ஆதி |
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன - தனதான |
பாடல் |
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண - பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு - மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் - முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி - களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர - வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர - முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி - லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
2 |
241. அருக்கிமெத்தென |
ராகம் - தாளம் - |
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் - தனதான |
பாடல் |
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட் - பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித் - தகர்போலத்
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க் - கெனஞானம்
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற் - றிடலாமோ
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற் - றிடுமாயம்
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற் - கதிர்வேலா
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத் - திடைதோயுஞ்
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
3 |
242. இருப்பவல் |
ராகம் - வஸந்தா தாளம் - ஆதி - கண்ட நடை (20) (எடுப்பு - அதீதம்) |
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன - தனதான |
பாடல் |
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு - மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய - கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத - லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் - விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த - மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் - கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் - தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
4 |
243. இருமலுரோக |
ராகம் - அஸாவேரி தாளம் - மிஸ்ரசாபு தகதிமி - 2. தகிட - 1 1/2 |
தனதன தான தனதன தான தனதன தான - தனதான |
பாடல் |
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி - விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை - யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு - முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியின தாள்கள் - அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக - இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை - விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் - மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
5 |
244. உடலினூடு |
ராகம் - தோடி தாளம் - அங்கதாளம் (5 1/2) தகிட - 1 1/2, தகிட 1 1/2, தகதகிட - 2 1/2 |
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான - தனதான |
பாடல் |
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு - முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத - தனிஞானச்
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத - சிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ - லருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய - அமராடி
மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
மடையை மோதி யாறூடு - தடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு - மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
6 |
245. உடையவர்கள் |
ராகம் - நளினகாந்தி தாளம் - ஆதி தேசாதி |
தனனதன தான தனனதன தான தனனதன தான - தனதான |
பாடல் |
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு - கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான - மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி - முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத - மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர் தர்பர யோகர் - நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடு - மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன் - வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
தணிமலையு லாவு - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
7 |
246. உய்யஞானத்து |
ராகம் - லலிதா தாளம் - கண்டசாபு (2 1/2) தகிட - 1 1/2, தக - 1 |
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தய்யனா தத்ததன - தனதான |
பாடல் |
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ - டுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி - யுறவாகி
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச - யிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் - பணிவேனோ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர - திகுமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு - றவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு - மருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
8 |
247. எத்தனைகலாதி |
ராகம் - கானடா தாளம் - அங்கதாளம் (5 1/2) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் - தனதான |
பாடல் |
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின் - செடமான
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம் - பசியாறல்
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின் - செயலான
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராகு நிற்குங் - கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் - தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ் - சதபேரி
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின் - கிரிசூழச்
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
9 |
248. எலுப்பு நாடி |
ராகம் - ரீதி கௌளை தாளம் - ஆதி (எடுப்பு 3/4 இடம்) |
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன - தனதான |
பாடல் |
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ - சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட்
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு - சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் - கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ - ணுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திட - விடும்வேலா
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் - மருகோனே
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் - குருநாதா
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
10 |
மேலே செல்க
249. எனக்கென |
ராகம் - மாயாமாளவகௌளை தாளம் - ஆதி |
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் - தனதான |
பாடல் |
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந்த - தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் - பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் - குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் - தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் - றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் - புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் - முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
11 |
250. எனையடைந்த |
ராகம் - ஆனந்த பைரவி தாளம் - திஸ்ரத்ருவம் (திஸ்ர நடை) (16 1/2) (எடுப்பு - /3/3/30) |
தனன தந்த தத்த தனன தந்த தத்த தனன தந்த தத்த - தனதான |
பாடல் |
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு - வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு - மிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு - மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி - தரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி - முனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு - முருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு - மணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
12 |
251. ஏது புத்தி |
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) தகிட 1 1/2, தகதிமி - 2 |
தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன - தந்ததான |
பாடல் |
ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்குனி - தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோந கைத்தவர் - கண்கள்காணப்
பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யாத கப்பன்முன் - மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது - சிந்தியாதோ
ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை - யெங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் - தந்தவாழ்வே
மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத - கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி - தம்பிரானே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
13 |
252. ஓலையிட்ட |
ராகம் - தாளம் - |
தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன - தனதான |
பாடல் |
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை - யமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் - மணம்வீசும்
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
வார ழுத்துத னத்திகள் குத்திர
மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு - மடமாதர்
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
மாத ருக்குவ ருத்தமி ருப்பது - தணியாதோ
வேலை வற்றிட நற்கணை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற
வீற ரக்கன்மு டித்தலை பத்தையு - மலைபோலே
மீத றுத்திநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்
வீர அச்சுத னுக்குந லற்புத - மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர
நீல ரத்தின மிக்கஅ றக்கிளி - புதல்வோனே
நீற திடடுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
நீல முற்றதி ருத்தணி வெற்புறை - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
14 |
253. கச்சணி |
ராகம் - தாளம் - |
தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன - தனதான |
பாடல் |
கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர - மயல்கூறிக்
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் - மடமாதர்
இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு - ளறியேனுக்
கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
யிப்பொழு தணுகவு - னருள்தாராய்
கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய - குறையால்வீழ்
குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை - வருகேசன்
அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
அச்சுதன் மகிழ்தரு - மருகோனே
அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
யப்பனெ யழகிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
15 |
254. கடற்செகத் தடக்கி |
ராகம் - தாளம் - |
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் - தனதான |
பாடல் |
கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
கடைக்கணிற் கொடுத்தழைத் - தியல்காமக்
கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
கரைத்துடுத் தபட்டவிழ்த் - தணைமீதே
சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்
தமிட்டிருட் குழற்பிணித் - துகிரேகை
சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்
தலத்தில்லைப் பவர்க்கிதப் - படுவேனோ
இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
தெழிற்றினைக் கிரிப்புறத் - துறைவேலா
இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
சிறைச்சியைப் பசித்திரைக் - கிசைகூவும்
பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றாப் படுத்துசற் - குருவாய்முன்
பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
16 |
255. கரிகுழல் |
ராகம் - தாளம் - |
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் - தனதான |
பாடல் |
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
கரிக்குவ டிணைக்குந் - தனபாரக்
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
கலைத்துகில் மினுக்யும் - பணிவாரைத்
தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
தவிர்த்துன துசித்தங் - களிகூரத்
தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
தலத்தினி லிருக்கும் - படிபாராய்
புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
பொடிப்பணி யெனப்பன் - குருநாதா
புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்
புகழ்ச்சிய முதத்திண் - புலவோனே
திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
தெறிப்புற விடுக்குங் - கதிர்வேலா
சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்
திருத்தணி யிருக்கும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
17 |
256. கலைமட வார் |
ராகம் - ஆனந்த பைரவி தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) தகதிமி - 2, தகிட - 1 1/2 |
தனதன தானம் தனதன தானம் தனதன தானம் - தனதான |
பாடல் |
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் - சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் - றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் - தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் - தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் - திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் - கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
18 |
257. கவடுற்ற சித்தர் |
ராகம் - தேஷ் தாளம் - |
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத் - தனதான |
பாடல் |
கவடுற்ற சித்தர்சட் சமயப்பர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் - பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத் - துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப் - பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
சரணப்ர சித்திசற் - றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக் - ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
துதிரத்தி னிற்குளித் - தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற் - பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
சுருதித்த மிழ்க்கவிப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
19 |
258. கனத்தற |
ராகம் - தாளம் - |
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தன தனத்தனத் தனத்தனத் - தனதான |
பாடல் |
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக் - குழலார்தங்
கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற் - கறியாதே
இனப்பிணிக் கணத்தினக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத் - தசைதோலால்
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
தெனக்குநித் தமுத்தியைத் - தரவேணும்
பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப் - பொரும்வேலா
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக் - குமரேசா
தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத் - தணைவோனே
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
20 |
மேலே செல்க
259. கனைத்த திர்க்குமி |
ராகம் - கானடா தாளம் - அங்கதாளம் (11 1/2) தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 தகதிமி - 2, தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தனத்த தத்தனத் தந்த தாத்தன - தந்ததான |
பாடல் |
கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட - லொன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு - திங்களாலே
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச - ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச - ழங்கலாமோ
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம - டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் - கந்தவேளே
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய - மங்கைபாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் - தம்பிரானே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
21 |
260. கிரியுலாவிய |
ராகம் - தாளம் - |
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன - தனதான |
பாடல் |
கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிக ளசடிகள்
கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் - விரகாலே
க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் - பொருளாலே
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
பழைய பேரென இதமுற அணைபவர் - விழியாலே
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை
பகர மாமயில் மிசைவர நினைவது - மொருநாளே
அரிய ராதிபர் மலரய னிமையவர்
நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக - இளையோனே
அரிய கானக முறைகுற மகளிட
கணவ னாகிய அறிவுள விதரண
அமரர் நாயக சரவண பவதிற - லுடையோனே
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவு றாநிலை பெறுதவ முடையவர்
தளர்வி லாமன முடையவ ரறிவினர் - பரராஜர்
சகல லோகமு முடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி யினிதுற
தணிகை மாமலை மணிமுடி யழகியல் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
22 |
261. கிறிமொழி |
ராகம் - தாளம் - |
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் - தனதான |
பாடல் |
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் - கிறபார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற் - றறிவேதும்
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றாவுநெக் கழிகருக் - கடலூடே
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் - பெறுவேனோ
பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் - தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் - புலவோனே
தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் - சுனைமேவுந்
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
23 |
262. குயிலொன்று |
ராகம் - தாளம் - |
தனனந் தனனத் தனனந் தனனத் தனனந் தனனத் - தனதான |
பாடல் |
குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க் - கணையாலே
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத் - தனலாலே
புயல்வந் தெறியக் கடனின் றலறப்
பொருமங் கையருக் - கலராலே
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தணையக் - கிடையாதோ
சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப் - பொரும்வீரா
தருமங் கைவனக் குறமங் கையர்மெயத்
தனமொன் றுமணித் - திருமார்பா
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப் - பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
24 |
263. குருவி யென |
ராகம் - தாளம் - |
தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன - தனதான |
பாடல் |
குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருக மெனப்புழு
குறவை யெனக்கரி மரமு மெனத்திரி - யுறவாகா
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் - நகையாமல்
மருவு புயத்திடை பணிக ளணப்பல
கரிய ரிசுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குட - னதுதேடேன்
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி - யருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு - வெகுதாளம்
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட - விடும்வேலா
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
அகில மனைத்தையு முயிரு மளித்தவ - னருள்சேயே
அமண ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
25 |
264. குலைத்து |
ராகம் - தாளம் - |
தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் - தனதான |
பாடல் |
குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்பு ரளக்
குவித்த விழிக் கயற்சு ழலப் - பிறைபோலக்
குனித்த நுதற் புரட்டி நகைத்
துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
குழைச்செ வியிற் றழைப்ப பொறித் - தனபாரப்
பொலித்து மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்ப ளெனப்
புனைத்த துகிற் பிடித்த இடைப் - பொதுமாதர்
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கி லறப் பசப்பி மயற்
புகட்டி தவத் தழிப்ப வருக் - குறவாமோ
தலத்த நுவைக் குனித்தொ ருமுப்
புரத்தை விழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்து கிலைப் - பரமாகத்
தரித்து தவச் சுரர்க்கண் முதற்
பிழைக்க மிடற் றடக்கு விடச்
சடைக்க டவுட் சிறக்க பொருட் - பகர்வோனே
சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
செழிக்க அருட் கொடுத்த மணிக் - கதிர்வேலா
தினைப்பு னமிற் குறத்தி மகட்
டனத்தின் மயற் குளித்து மகிழ்த்
திருத்த ணியிற் றரித்த புகழ்ப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
26 |
265. குவளைக் கணை |
ராகம் - தாளம் - |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
பாடல் |
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் - பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் - தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் - புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் - தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் - பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் - தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் - புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
27 |
266. கூந்தலவிழத்து |
ராகம் - தாளம் - |
தாந்தன தத்தன தத்தன தத்தன தாந்தன தத்தன தத்தன தத்தன தாந்தன தத்தன தத்தன தத்தன - தனதான |
பாடல் |
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் - புயமீதே
கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்
வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்
கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் - பலநாளும்
ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ
ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ
ரீங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் - பொருள்தீரில்
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட
ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட - லருள்வாயே
காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் - மருகோனே
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்
வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி - யிளையோனே
தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை
வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ
தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை - குவைவானந்
தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு
வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்
சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புரை - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
28 |
267. கூர்வேல் பழித்தவிழி |
ராகம் - தாளம் - |
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன - தனதான |
பாடல் |
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல - ரணைமீதே
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை - யுடைநாணக்
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோ லையிற்றுவிழ - விளையாடுங்
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம
கானூ ருறைக்கலக - மொழியாதோ
வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் - கடல்போல
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
வேலா திருத்தணியி - லுறைவோனே
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் - குருநாதா
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டனைத்துமகிழ் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
29 |
268. கொந்துவார் |
ராகம் - நாதநாமக்ரியா தாளம் - அங்கதாளம் (7 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2, தகதிமி - 2, தகதிமி - 2 |
தந்து தானன தனதன தனதன தந்து தானன தனதன தனதன தந்து தானன தனதன தனதன - தனதான |
பாடல் |
கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவிய - குருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம - யவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து - விரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு - மறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு - முருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி - புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு - மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
30 |
மேலே செல்க
269. சினத்தவர் முடிக்கும் |
ராகம் - ஆபோகி தாளம் - கண்டசாபு (2 1/2) தகிட 1 1/2, தக - 1 |
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் - தனதான |
பாடல் |
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் - சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் - றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் - பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் - செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் - தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் - கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் - கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
31 |
270. சினத்தி லத்தினை |
ராகம் - சாமா தாளம் - ஆதி 2 களை (எடுப்பு 3/4 இடம்) |
தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன - தனதான |
பாடல் |
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல - வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ - தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகர - மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் - புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு - தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி - கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை - பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
32 |
271. சொரியும் முகிலை |
ராகம் - தாளம் - |
தனன தனனத் தனன தனனத் தனன தனனத் - தனதான |
பாடல் |
சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் - சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் - றியல்வாணர்
தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் - கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் - பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் - தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் - டனகானிற்
குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் - தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
33 |
272. தாக்கு அமருக்கு |
ராகம் - கானடா தாளம் - ஆதி (எடுப்பு 1/2 இடம்) |
தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன - தனதான |
பாடல் |
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷய றப்பசி யரிறயை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு - தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை - தடுமாறிப்
போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள்
பூத்தம லத்ரய பூரியை நேரிய - புலையேனைப்
போக்கிவ டக்கட னோஅடி யாரொடு
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் - புரிவாயே
மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி - முழுமோடி
மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு - முகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் - மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
34 |
273. திருட்டு நாரிகள் |
ராகம் - தாளம் - |
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன - தனதான |
பாடல் |
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் - வலையாலே
திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்
இதத்தை யோடவி டுத்தும யக்கிடு
சிமிட்டு காமவி தத்திலு முட்பட - அலைவேனோ
தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு - முருகோனே
சமப்ர வீணம தித்திடு புத்தியில்
இரக்க மாய்வரு தற்பர சிற்பர
சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண - குருநாதா
வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென - விளையாட
விதித்த வீரச மர்க்கள ரத்தமு
மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய - மறவோனே
பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் - கழுநீரின்
பிணித்த போதுவெ டித்துர சத்துளி
கொடுக்கு மோடைமிடி குத்ததி ருத்தணி
பிறக்க மேவுற அத்தல முற்றுறை - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
35 |
274. துப்பாரப்பாடல் |
ராகம் - பெஹாக் தாளம் - ஆதி திஸ்ர நடை (எடுப்பு அதீதம்) |
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தனனத் - தனதான |
பாடல் |
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் - குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் - பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் - பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் - தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் - களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் - தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் - தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
36 |
275. தொக்கறாக் குடில |
ராகம் - சுப பந்துவராளி தாளம் - சதுஸ்ர ஏகம் (4 களை) (16) தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தக - 1 |
தத்தனாத் தனன தத்தனாத் தனன தத்தனாத் தனன - தனதான |
பாடல் |
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு - மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச - மயநூலைக்
கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு - ருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ - தொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு - நிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
வெற்பபார்ப் பதிந - திகுமாரா
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு - மிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
37 |
276. தொடத்துளக்கிகள் |
ராகம் - தாளம் - |
தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன - தனதான |
பாடல் |
தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் - முழுமோசந்
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை யினவலை - புகுதாமல்
அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட
னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு - விளையாடி
அவத்தை தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
லருட்பு கட்டியு னடியிணை யருளுவ - தொருநாளே
படைத்த னைததையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தி னுச்சியி னடநவி லுமையரு - ளிளையோனே
பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்
தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
படிக்க டத்தையும்ட வயிறடை நெடியவர் - மருகோனே
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு - மயில்வீரா
தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
38 |
277. நிலையாத |
ராகம் - ஸஹானா / செஞ்சுருட்டி தாளம் - அங்கதாளம் (6 1/2) தகதகிட - 2 1/2, தகிட 1 1/2, தக - 1, தகிட 1 1/2 |
தனதான தனத்தன தான தனதான தனத்தன தான தனதான தனத்தன தான - தனதான |
பாடல் |
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி - யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி - துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி - தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலைமீதில் பிழைத்திட வேநி - னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி - விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு - முருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ - அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
39 |
278. நினைத்த |
ராகம் - சிந்துபைரவி தாளம் - கண்டஜம்பை (8) |
தனத்த தத்தனத் - தனதான |
பாடல் |
நினைத்த தெத்தனையிற் - றவறாமல்
நிலைத்த புத்திதனைப் - பிரியாமற்
கனத்த தத்துவமுற் - றழியாமற்
கதித்த நித்தியசித் - தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் - கெளியோனே
மதித்த முத்தமிழிற் - பெரியோனே
செனித்த புத்திரரிற் - சிறியோனே
திருத்த ணிப்பதியிற் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
40 |
மேலே செல்க
279. பகலிராவினும் |
ராகம் - தந்யாசி தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தனன தானனம் தனன தானனம் தனன தானனம் - தனதான |
பாடல் |
பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் - டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் - சிலவோதி
அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் - தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந் - திடலாமோ
சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் - கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் - கதிர்வேலா
சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன் - சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
41 |
280. பருத்தபற் சிரத்தினை |
ராகம் - ஹம்ஸானந்தி தாளம் - ஆதி |
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் - தனதான |
பாடல் |
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப் - பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப் - பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப் - புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித் - தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத் - திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத் - தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
சிரித்தெரித் தநித்தர்பொற் - குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
42 |
281. பழமை செப்பிய |
ராகம் - தாளம் - |
தனன தத்தன தத்தன தத்தன தனன தத்தன தத்தன தத்தன தனன தத்தன தத்தன தத்தன - தனதான |
பாடல் |
பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
முறைம சக்கிய ணைத்துந கக்குறி
படஅ ழுத்திமு கத்தைமு கத்துற - வுறவாடிப்
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
பலவி தத்திலு மற்பரெ னச்சொலு - மடமாதர்
அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை - அடியேனை
அகில சத்தியு மெட்டுறு சித்தியு
மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
மருண பொற்பத முற்றிட வைப்பது - மொருநாளே
குழவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
கரண மிட்டுந டித்தமி தப்படு
குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு - மொருசூரன்
குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித - மயில்வீரா
தழையு டுத்தகு றத்திப தத்துணை
வருடி வட்டமு கத்தில தக்குறி
தடவி வெற்றிக தித்தமு லைக்குவ - டதன்மீதே
தரள பொற்பணி கச்சுவி சித்திரு
குழைதி ருத்திரு ருத்திமி குத்திடு
தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
43 |
282. புருவ நெறித்து |
ராகம் - தாளம் - |
தனதன தத்தன தனதன தத்தத் தனதன தத்தத் - தனதான |
பாடல் |
புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்
புளகித வட்டத் - தனமானார்
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளு மசட்டுப் - புலையேனைக்
கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட் - டிடுதீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள் துதிக்கக் - கருதாதோ
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப் - பொரும்வேலா
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் - புணர்மார்பா
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகை முழக்கப் - புவிமீதே
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
44 |
283. பூசலிட்டு |
ராகம் - தாளம் - |
தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த - தனதான |
பாடல் |
பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
போர்விடத் தைக்கெ டுத்து - வடிகூர்வாள்
போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து
போகமிக் கப்ப ரிக்கும் - விழியார்மேல்
ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
ளாகிமெத் தக்க ளைத்து - ளழியாமே
ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை
யான்வழுத் திச்சு கிக்க - அருள்வாயே
வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த
மாதர்கட் கட்சி றைக்கு - ளழியாமே
வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
மாமயிற் பொற்க ழுத்தில் - வரும்வீரா
வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
வீறுடைப் பொற்கு றத்தி - கணவோனே
வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த
வேளெனச் சொற்க ருத்தர் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
45 |
284. பெருக்கவு பாய |
ராகம் - தாளம் - |
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் - தனதான |
பாடல் |
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங் - களிலேசம்
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக்கட லூடுந் - தணியாத
கருக்கட லூடுங் கதற்றும நேகங்
கலைக்கட லூடுஞ் - சுழலாதே
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் - தருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங் - களும்வாழச்
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் - தனிவீழத்
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந் - தனில்வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
46 |
285. பொரியப் பொரிய |
ராகம் - தாளம் - |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
பாடல் |
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
துகளிற் புதையத் - தனமீதே
புரளப் புரளக் கறுவித் தறுகட்
பொருவிற் சுறவக் - கொடிவேள்தோள்
தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
செயலற் றனள்கற் - பழியாதே
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத் - தரவேணும்
சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்
சுரருக் குரிமைப் - புரிவோனே
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
சுருதிப் பொருளைப் - பகர்வோனே
தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
தனிநெட் டயிலைத் - தொடும்வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
47 |
286. பொருவிக்க |
ராகம் - தாளம் - |
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத் - தனதான |
பாடல் |
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
புதுமைப் புண்டரிகக் - கணையாலே
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
பொழியத் தென்றல்துரக் - குதலாலே
தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்களுதிப் - பதனானே
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
தெரிவைக் குன்குரவைத் - தரவேணும்
அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
தருமைக் குன்றவருக் - கெளியோனே
அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
தயில்கைக் கொண்டதிறற் - குமரேசா
தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்டபுயத் - திருமார்பா
தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
தணிகைச் செங்கழநிப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
48 |
287. பொற்குட மொத்த |
ராகம் - தாளம் - |
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன - தனதான |
பாடல் |
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
கைப்பொருள் புக்கிட - வேதான்
புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
பொட்டணி நெற்றிய - ரானோர்
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
அற்பர மட்டைகள் - பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத்தருள் - வாயே
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி - யாலக்
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
குத்தத ணிக்கும - ரேசா
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
றத்தித னக்கிரி - மேலே
தைக்கும னத்தச மர்த்தஅரக்கர்த
லைக்குலை கொத்திய - வேளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
49 |
288. பொற்பதத்தினை |
ராகம் - த்விஜாவந்தி / ரஞ்சனி தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) |
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த - தனதான |
பாடல் |
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்க - அறியாதே
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று - நினையாதே
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்த - முழல்வேனை
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப - தொருநாளே
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற - மயில்வீரா
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி - லுறைவோனே
கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி - லணைவோனே
கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
50 |
மேலே செல்க
289. மருக்குல மேவும் |
ராகம் - தாளம் - |
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் - தனதான |
பாடல் |
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும் - நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந் - திறநாடாத்
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன் - பிலிமூகன்
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ் - சபைதாராய்
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன் - நவநீதங்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் - மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண் - டிசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்
திருத்தணி மேவும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
51 |
290. மலை முலைச்சியர் |
ராகம் - தாளம் - |
தனன தத்தன தனன தத்தன தனன தத்தன - தனதான |
பாடல் |
மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
மதிமு கத்திய - ரழகான
மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
மனது ருக்கிக - ளணைமீதே
கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு
கலவி யிற்றுவள் - பிணிதீராக்
கசட னைக்குண அசட னைப்புகல்
கதியில் வைப்பது - மொருநாளே
குலகி ரிக்குல முருவ விட்டமர்
குலவு சித்திர - முனைவேலா
குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
குமர சற்குண - மயில்வீரா
தலம திற்புக லமர ருற்றிடர்
தனைய கற்றிய - அருளாளா
தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
தணிம லைக்குயர் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
52 |
291. முகத்தை மினுக்கி |
ராகம் - தாளம் - |
தனத்தன தத்தன தனதன தனதன தனத்தன தத்தன தனதன தனதன தனத்தன தத்தன தனதன தனதன - தனதான |
பாடல் |
முகத்தைமி னக்கிக ளசடிகள் கபடிகள்
விழத்தும ருட்டிகள்ட கெருவிகள் திருடிகள்
மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் - விதமாக
முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் - ஒழிவாக
மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் - வடிவேலும்
வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு - ளருளாயோ
புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ - ளபிராமி
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் - அமுதாகச்
செகத்தைய கத்திடு நெடியவர் கடையவள்
அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய - சிறியோனே
செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
53 |
292. முகிலு மிரவி |
ராகம் - தாளம் - |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன - தனதான |
பாடல் |
முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு
முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு - மெனநாடி
முதிய கனனென தெய்வதரு நிகரென
முதலை மடுவினி லதவிய புயலென
முகமு மறுமுக முடையவ னிவனென - வறியோரைச்
சகல பதவியு முடையவ ரிவரென
தனிய தநுவல விஜயவ னிவனென
தபனன் வலம்வரு கிரிதனை நிகரென - இசைபாடிச்
சயில பகலவ ரிடைதொறு நடைசெயு
மிரவு தவிரவெ யிருபத மடையவெ
சவித அடியவர் தவமதில் வரவருள் - புரிவாயே
அகில புவனமு மடைவினி லுதவிய
இமய கிரிமயில் குலவரை தநுவென
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த - அபிராமி
அமரு மிடனன லெனுமொரு வடிவுடை
யவனி லுரையவன் முதுதமி ழுடையவ
னரியொ டயனுல கரியவ னடநவில் - சிவன்வாழ்வே
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
திரைக ளெறிகடல் சுவறிட களமிசை
திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் - பெருகாறாச்
சிகர கிரிநெரி படபடை பொருதருள்
திமிர தினகர குருபர இளமயில்
சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
54 |
293. முடித்த குழலினர் |
ராகம் - தாளம் - |
தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன - தனதான |
பாடல் |
முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தி லிலகிய - விழியாலும்
முலைக்கி ரிகள் மிசை யசைத்த துகிலினும்
இளைத்த இடையினு - மயலாகிப்
படுத்த அணைதனி லணைத்த அவரொடு
படிக்கு ளநுதின - முழலாதே
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரிணை - யருள்வாயே
துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
தொடுத்த சரம்விடு - ரகுராமன்
துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
துலக்க அரிதிரு - மருகோனே
தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
தழைத்த கதலிக - ளவைசாயத்
தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
தழைத்த சரவண - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
55 |
294. முத்துத்தெறிக்க |
ராகம் - மோகனம் தாளம் - கண்ட த்ருவம் (17) (எடுப்பு /5/50/5) |
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன - தனதான |
பாடல் |
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
முட்டத்தொ டுத்த - மலராலே
முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
முற்பட்டெ றிக்கு - நிலவாலே
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
இப்பொற்கொ டிச்சி - தளராதே
எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
இற்றைத்தி னத்தில் - வரவேணும்
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
வெற்பைத்தொ ளைத்த - கதிர்வேலா
மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப்ப ணைத்த - மணிமார்பா
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த - கழலோனே
வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
வெட்டித்து ணித்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
56 |
295. முலைபுளக |
ராகம் - தாளம் - |
தனதனன தனதந்த தனதனன தனதந்த தனதனன தனதந்த - தனதான |
பாடல் |
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
முகிலளக மகில்பொங்க - அமுதான
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம்வெயர்வு பெறமன்ற - லணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
படவுருகி யிதயங்கள் - ப்ரியமேகூர்
கலவிகரை யழியின்ப அலையிலலை படகின்ற
கவலைகெட நினதன்பு - பெறுவேனோ
அலையெறிவு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
அதிரவெடி படஅண்ட - மிமையோர்கள்
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று - பொரும்வேலா
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
சடைமுடியி லணிகின்ற - பெருமானார்
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிமலையி லுறைகின்ற - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
57 |
296. மொகுமொகென |
ராகம் - தாளம் - |
தனதனன தனதனன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன - தனதான |
பாடல் |
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை
முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள - ரதிபார
முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில
மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ - இணைகோட
அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல
ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ
டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர - மதநீதி
அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு
மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை - நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட - டிடிதீதோ
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட - ததிதீதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த் றிற்றிரிரி - யெனவேநீள்
சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது
சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்
தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
58 |
297. வங்கம் பெறுகட |
ராகம் - தாளம் - |
தந்தந் தனதன தந்தனந் தனதன தந்தந் தனதன - தனதான |
பாடல் |
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
வந்துந் தியதிரு - மதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு - மதனாலே
பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு - கொடியான
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை - நினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி - லதனூடே
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு - மயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
என்றும் புகழ்பெற - மலரீனும்
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
59 |
298. வட்டவாட்டன |
ராகம் - ரஞ்சனி தாளம் - மிஸ்ரசாபு |
தத்தனாத் தனன தத்தனாத் தனன தத்தனாத் தனன - தனதான |
பாடல் |
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி - பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி - வயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை - யழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு - கழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் - மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த - ணியில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய - எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
60 |
மேலே செல்க
299. வரிக்கலையி |
ராகம் - காபி தாளம் - அங்கதாளம் (5 1/2) (எடுப்பு - அதீதம்) தகதிமி - 2, தகதிமி - 2, தகிட - 1 1/2 |
தனத்ததன தனதான தனத்ததன தனதான தனத்ததன தனதான - தனதான |
பாடல் |
வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
மயக்கியிடு மடவார்கள் - மயலாலே
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
வயிற்றிலெரி மிகமூள - அதனாலே
ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி - யவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல - மருள்வாயே
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
மிகுத்தபல முடனோத - மகிழ்வோனே
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடு - புலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
திருக்கையினில் வடிவேலை - யுடையோனே
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
திருத்தணிகை மலைமேவு - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
61 |
300. வாருற்றெழு பூண்முலை |
ராகம் - தாளம் - |
தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன - தனதான |
பாடல் |
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்
காருற்றெழு நீள்குழல் மஞ்சியர்
வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் - தொருமீதே
மாணுற்றெதிர் மோகன விஞ்சையர்
சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர்
வாகக்குழை யாமப ரஞ்சியர் - மயலாலே
சீருற்றெழு ஞானமு டன்கல்வி
நேரற்றவர் மால்கொடு மங்கியெ
சேருற்றறி வானத ழிந்துயி - ரிழவாமுன்
சேவற்கொடி யோடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத - மருள்வாயே
போருற்றிடு சூரர்சி ரங்களை
வீரத்தொடு பாரில ரிந்தெழு
பூதக்கொடி சோரிய ருந்திட - விடும்வேலா
பூகக்குலை யேவிழ மென்கயல்
தாவக்குலை வாழைக ளுஞ்செறி
போகச்செநெ லேயுதி ருஞ்செய்க - ளவைகோடி
சாரற்கிரி தோறுமெ ழும்பொழில்
தூரத்தொழு வார்வினை சிந்திடு
தாதுற்றெழு கோபுர மண்டப - மவைசூழுந்
தார்மெத்திய தோரண மென்தெரு
தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள்
தாமெச்சிய நீள்தணி யம்பதி - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
62 |
301. வினைக்கின |
ராகம் - ஆரபி தாளம் - அங்கதாளம் |
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் - தனதான |
பாடல் |
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் - விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வந் - துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங் - கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் - கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் - புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் - புகைமூளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் - திறல்வேலா
திறப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் – பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
63 |
302. வெற்றி செயவுற்ற |
ராகம் - ஹம்ஸத்வனி தாளம் - கண்டத்ருவம் (17) (எடுப்பு - /5/50/5) |
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்த - தனதான |
பாடல் |
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட - விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு - மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு - மரியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று - வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த - கழல்வீரா
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த - ழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு - முருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
64 |
மேலே செல்க
முன்பக்கம்
|
|
|