அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
திருச்செங்கோடு
585. அன்பாக வந்து
ராகம் - ஆஹிரி
தாளம் - ஆதி
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த - தனதான
பாடல்
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற - நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் - முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற - குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து - அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை - யணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த - வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு - வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

586. பந்தாடி யங்கை
ராகம் -
தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த - தனதான
பாடல்
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த - குழல்மீதே

பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள் - முகமீதே

மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய் - தனமீதே

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற - னருள்தாராய்

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் - மருகோனே

கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை - மணவாளா

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப - அணிவோனே

திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 2

587. வண்டார் மதங்களுண்டே
ராகம் -
தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த - தனதான
பாடல்
வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
வந்தூரு கொண்டே - லதனோடும்

வண்காம னம்பு தன்கால் மடங்க
வன்போர் மலைந்த - விழிவேலும்

கொண்டே வளைந்து கண்டார் தியங்க
நின்றார் குரும்பை - முலைமேவிக்

கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
குன்றாம லுன்ற - னருள்தாராய்

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போ னகந்த - மருகோனே

பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற - குமரேசா

செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை - மகிழ்வாழ்வே

செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோ டமர்ந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 3

588. கரையறவுருகுதல்
ராகம் -
தாளம் -
தனதன தனதன தனதன தனதன
தந்தான தந்த - தனதான
பாடல்
கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல் - மடமாதர்

கலவியில் முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும் - வினையேனும்

உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச - மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று - பெறுவேனோ

வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர - புரிவாழ

மதவித கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க - முதுமீன

திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற - கதிர்வேலா

ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
செங்கோட மர்ந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 4

589. இடம்பார்த்து
ராகம் -
தாளம் -
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் - தனதான
பாடல்
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றிணங்காப் பசிப்பொங் - கனல்மூழ்கி

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண் - டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன் - கவிபாடி

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன் - புறலாமோ

கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கணைந்தாட் கணித்தின் - புயமீவாய்

கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங் - கதிர்வேலா

அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன் - றிலதாகி

அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
கறிந்தோர்க் களிக்கும் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 5

590. கலக்குங் கோதற
ராகம் -
தாளம் -
தனத்தந் தானன தனத்தந் தானன
தனத்தந் தானன - தனதான
பாடல்
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு - மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி - லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு - முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென - அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய - வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக - முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர - வயலூரா

திதிக்கும் பார்வையின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 6

591. துஞ்சு கோட்டி
ராகம் -
தாளம் -
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் - தனதான
பாடல்
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்
கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் - திரிமானார்

தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் - துழலாதே

கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் - கிடையாநீ

கண்டு வேட்டுப் பொருட் கொண்டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் - பெறுவேனோ

வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் - துடையோனே

வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் - திளையோனே

கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் - புணர்வோனே

கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 7

592. நீலமஞ்சான குழல்
ராகம் -
தாளம் -
தானனந் தானதன தானனந் தானதன
(6 முறை) - தந்ததான
பாடல்
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை

நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி

நேர்சுகம் போலமு கானகந் தாரர்புய
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி - ரண்டுபோல

நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி

நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை

நேசசந் தான அல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் - சம்பையாரஞ்

சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை

சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி

தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை - யஞ்சியோடத்

தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு

தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு

சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக - விஞ்சைதாராய்

சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல

தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்

தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் - விந்தையோனே

சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை

தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி

தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன - முங்கொள்வேலா

மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு

மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்

மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி - யொன்றுமானை

மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச

வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி

மாதுபங்கா மறைகு லாவுசெங் கோடைநகர்
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் - தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 8

593. பொன்றலைப் பொய்
ராகம் -
தாளம் -
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத் - தனதான
பாடல்
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் - கறியாமே

பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் - கொடியால்மேல்

துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் - பதிமீதே

தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத் - தருவாயே

குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் - சுரலோகா

கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் - பொரும்வேழம்

சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக் - களிகூருஞ்

செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 9

594. மந்தக் கடைக்கண்
ராகம் -
தாளம் -
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன
தந்தத் தனத்தந் தாத்தன - தனதான
பாடல்
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்
மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ - ரநுராக

வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்
வண்பற் றிருப்புங் காட்டுவர் - தனபாரச்

சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர்
சங்கக் கழுத்துங் காட்டுவர் - விரகாலே

சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர்
தங்கட் கிரங்கங் காட்டுவ - தொழிவேனோ

பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை
பங்கிற் றகப்பன் தாட்டொழு - குருநாதா

பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்
பங்கப் படச்சென் றோட்டிய - வயலூரா

கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு
கும்பிட் டிடக்கொண் டாட்டமொ - டணைவோனே

குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய
கொங்கிற் றிருச்செங் கோட்டுறை - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 10

மேலே செல்க

595. மெய்ச்சார் வற்றே
ராகம் -
தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் - தனதான
பாடல்
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப் - பவவேலை

விட்டே றிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத் - தையர்மேலே

பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற் - கழல்பேணிப்

பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற் - பகமேதான்

செச்சா லிச்சா லத்தே றிச்சே
லுற்றா ணித்துப் - பொழிலேறுஞ்

செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க் - கதிரேனல்

முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப் - புயவேளே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 11

596. வருத்தங் காண
ராகம் -
தாளம் -
தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
தனத்தந் தான தானன - தனதான
பாடல்
வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
மயக்கம் பூண மோதிய - துரமீதே

மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
மரிக்கும் பேர்க ளோடுற - வணியாதே

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
பிறப்புந் தீர வேயுன - திருதாளே

பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
பெலத்தின் கூர்மை யானது - மொழிவாயே

இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
எதிர்த்துஞ் சூரர் மாளவெ - பொரும்வேலா

இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
எனத்திண் கூளி கோடிகள் - புடைசூழத்

திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
செழித்தன் பாப வீறிய - பெருவாழ்வே

திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
திருச்செங் கோடு மேவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 12

597. ஆலகால
ராகம் -
தாளம் -
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன - தனதான
பாடல்
ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வேற்றும்வி ழிச்சியர்
யாவ ராயினு நத்திய ழைப்பவர் - தெருவூடே

ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசை கொடுத்தும ருட்டிகள்
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் - பலரூடே

மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் - உறவாலே

மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி - லுழல்வேனோ

மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு - அடியாலே

மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள் விடுத்தபி - னவனோடே

ஞான மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன் - மருகோனே

ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக
நாக மாமலை சொற்பெற நிற்பதொர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 13

598. காலனிடத்தணுகாதே
ராகம் - சங்கராபரணம்
தாளம் - திஸ்ர ஏகம் (3)
தான தனத் - தனதான
பாடல்
காலனிடத் - தணுகாதே

காசினியிற் - பிறவாதே

சீலஅகத் - தியஞான

தேனமுதைத் - தருவாயே

மாலயனுக் - கரியானே

மாதவரைப் - பிரியானே

நாலுமறைப் - பொருளானே

நாககிரிப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 14

599. தாமா தாமா
ராகம் -
தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் - தனதான
பாடல்
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் - தரணீசா

தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் - தபராத

யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் - தெனதாவி

யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் - துகலாமோ

காமா காமா தீனா நீணா
காவாய் காளக் - கிரியாய்கங்

காளா லீலா பாலா நீபா
காமா மோதக் - கனமானின்

தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் - தவரோதுஞ்

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 15

600. அத்து கிரினலத
ராகம் -
தாளம் -
தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன - தனதான
பாடல்
அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள - கிதபூத

ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு - நெடுமாம

ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி - பகராதே

யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
யத்தி னிடையடிமை - விழலாமோ

தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முநியுதவு - மொழியாறுத்

தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப - னிருதோளா

தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர் - குலநாகந்

தத்த மிசைமரக தத்த மனியமயில்
தத்த விடுமமரர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 16

601. அத்த வேட்கை
ராகம் -
தாளம் -
தத்த தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் - தனதான
பாடல்
அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் - தமராயன்

பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் - றியவோடும்

சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் - திணிதாய

சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் - பெறுவேனோ

கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் - கரசாய

குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் - குமரேசா

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் - திடமேவும்

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 17

602. பத்தர் கணப்ரிய
ராகம் - பீம்பளாஸ்
தாளம் - ஆதி (எடுப்பு - 3/4 இடம்)
தத்தன தத்ததன தத்தன தத்தன
தத்தன தத்தன - தனதான
பாடல்
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய - குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத - மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி - தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக - மறவேனே

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி - தினைகாவல்

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப - னிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட - மறைநூலின்

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 18

603. புற்புதமெனாம
ராகம் - நவரஸ கன்னட
தாளம் - ஆதி
தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான - தனதான
பாடல்
புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு - மனையாளும்

புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத - பெருவாழ்வு

நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு - மடியேன்யான்

நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத - நினைவாயே

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி - மருகோனே

தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி - மறையோனே

கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர் - கொடிகோவே

கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 19

604. பொற்சித்ர
ராகம் -
தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் தத்தத் - தனதான
பாடல்
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
புட்பத்துக் கொப்பக் கற்பித் - திளைஞோர்கள்

புட்பட்டுச் செப்பத் துப்பற்
கொத்தப்பொற் றித்தத் திட்பப்
பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் - தனமானார்

கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
தத்திற்புக் கிட்டப் பட்டுக்
கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் - திரியாமல்

கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
சித்திப்பப் பக்ஷத் திற்சொற்
கற்பித்தொப் பித்துக் கொற்றக் - கழல்தாராய்

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
துக்கச்சத் துக்குக் குக்குக்
குக்குக்குக் குக்குக் குக்குக் - கெனமாறா

குட்சிக்குப் பக்ஷக் கைக்குக்
கக்ஷத்திற் பட்சத் தத்தக்
கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் - குடதாரி

சற்சித்துத் தொற்புத் திப்பட்
சத்தர்க்கொப் பித்தட் சத்துச்
சத்தத்தைச் சத்திக் கொச்சைப் - பதிவாழ்வே

தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
செற்பற்றைச் செற்றிட் டுச்சச்
சற்பப்பொற் றைக்குட் சொக்கப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 20

605. கொடிய மறலியும்
ராகம் - சந்தர கௌன்ஸ்
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட - 1 1/2, தகதிமி - 2, தகதிமி - 2, தகதிமி - 2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன - தனதான
பாடல்
கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு - மமர்காண

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை - யிலுநாலும்

படியு நெடியன எழுபுன ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத - மிசையேறிப்

பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை - வரவேணும்

சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர - தரபாதத்

தரணி தரதநு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு - மயில்வாழ்வே

நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ - நெடுவானும்

நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகல சகலமு மடியவொர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 21

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com