|
|
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் |
கோடைநகர் (வல்லக்கோட்டை) |
703. ஆதிமுதனாளில் |
ராகம் - மாயா மாளவ கௌளை தாளம் - அங்கதாளம் (5 1/2) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த - தனதான |
பாடல் |
ஆதிமுத னாளி லென்றன் தாயுட லியி ருந்து
ஆகமல மாகி நின்று - புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று - விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று - பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு - தருவாயே
சீதைகொடு போகு மந்த் ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் - மருகோனே
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் - முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த - குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
1 |
704. சாலநெடு |
ராகம் - தாளம் - |
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த - தனதான |
பாடல் |
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து - புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து - விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து - பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு - தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த - முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் - மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட - குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
2 |
705. ஏறானாலே |
ராகம் - தாளம் - |
தானா தானா தானா தானா தானா தானா - தனதானா |
பாடல் |
ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக் - கணையாலே
ஏயா வேயா மாயா வேயா
லாமே ழோசைத் - தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக் - கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத் - தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக் - குமரேசா
தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் - பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப் - பொருதோனே
வேதா போதா வேலா பாலா
வீரா வீரப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
3 |
706. ஞாலமெங்கும் |
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - அங்கதாளம் (10) (மிஸ்ர ஜம்பை /7/0) தகிட தக திமி - 3 1/2, தகிட தக திமி - 3 1/2, தகதிமிதக - 3 |
தான தந்த தனத்த தத்த - தனதானா |
பாடல் |
ஞால மெங்கும் வளைத்த ரற்று - கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் - வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் - அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க - வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த - ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு - மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த - முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
4 |
707. தோழமை கொண்டு |
ராகம் - பிருந்தாவன சாரங்கா தாளம் - அங்கதாளம் (7 1/2) தகதிமி தகதிமி - 4, தகிட தகதிமி - 3 1/2 |
தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன - தனதான |
பாடல் |
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் - பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் - தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள் - வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி - விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு - மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு - மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல - வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
5 |
708. தோடப் பாமற்றோய் |
ராகம் - தாளம் - |
தானத் தானத் தானத் தானத் தானத் தானத் - தனதான |
பாடல் |
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற் - றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச் - சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் - டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் - தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
தாரச் சீறிப் - பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் - தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் - திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
6 |
709. வாசித்த நூல் |
ராகம் - தாளம் - |
தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த - தனதான |
பாடல் |
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று - நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று - மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு - முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்பி சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று - மொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த - கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று - விழுவோனே
கூசிப்பு காலொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த - சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
7 |
மேலே செல்க
முன்பக்கம்
|
|
|