|
|
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் |
கதிர்காமம் |
636. திருமகள் |
ராகம் - குந்தல வராலி தாளம் - ஆதி |
தனதனன தான தனதனன தான தனதனன தான - தனதான |
பாடல் |
திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் - பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் - பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் - பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் - பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் - பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் - பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் - பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
1 |
637. அலகின் மாறு |
ராகம் - தாளம் - |
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான - தனதான |
பாடல் |
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி - அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடோய - மருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு - வெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத - படிபாராய்
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
லெறியும் வேலை மாறாத - திறல்வீரா
இமள மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர் - சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி - லிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
2 |
638. உடுக்கத் துகில் |
ராகம் - காம்போதி தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன - தனதான |
பாடல் |
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் - யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் - வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி - ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சூழல்வேனை யாளுவ - தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக - வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் - வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதூறு - வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
3 |
639. எதிரிலாத |
ராகம் - சக்ரவாஹம் தாளம் - திஸ்ரரூபகம் - திஸ்ரநடை (7 1/2) (எடுப்பு - /3 0) |
தனன தான தத்த - தனதான |
பாடல் |
எதிரி லாத பத்தி - தனைமேவி
இனிய தாள்நி னைப்பை - யிருபோதும்
இதய வாரி திக்கு - ளுறவாகி
எனது ளேசி றக்க - அருள்வாயே
கதிர காம வெற்பி - லுறைவோனே
கனக மேரு வொத்த - புயவீரா
மதுர வாணி யுற்ற - கழலோனே
வழுதி கூனி மிர்த்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
4 |
640. கடகட கருவிகள் |
ராகம் - தோடி தாளம் - ஆதி (2 களை) |
தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தந் - தனதான |
பாடல் |
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம் - மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் - புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் - தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் - றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் - றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் - டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் - டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
5 |
641. சமரமுக |
ராகம் - தாளம் - |
தனதனன தானத்த தனதனன தானத்த தனதனன தானத்த - தனதான தானனா |
பாடல் |
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள் - மயில்போ லுலாவியே
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர்
தமையுணர ராகத்தின் - வசமாக மேவியே
உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு
முரியவர் மகாதத்தை - யெனுமாய மாதரார்
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்த - மருள்கூர வேணுமே
இடகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
யெழுதரிய காயத்ரி - யுமையாள் குமாரனே
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதணருகு சேவிக்கு - முருகா விசாகனே
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமர்த்ய - கவிராஜ ராஜனே
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தி - லுரியாபி ராமனே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
6 |
642. சரத்தேயுதித்தாய் |
ராகம் - காபி தாளம் - ஆதி - கண்ட நடை (20) (எடுப்பு - அதீதம்) |
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா - தனதான |
பாடல் |
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே - வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா - னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் - விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா - ளருள்வாயே
புரத்தாதர் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே - வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் - வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் - மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்காம முற்றார் - முருகோனே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
7 |
643. சரியையாளர் |
ராகம் - தாளம் - |
தனதனா தத்தனத் தனதனா தத்தனத் தனதனா தத்தனத் - தனதான |
பாடல் |
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட் - டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் - பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் - பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற் - றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக் - ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் - கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித் - தமராடிக்
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
8 |
644. பாரவித |
ராகம் - தாளம் - |
தானதன தத்தத்த தானதன தத்தத்த தானதன தத்தத்த - தனதான |
பாடல் |
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெருக்குற்ற - இடையாலே
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி - விடுமாதர்
காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தி - லதிமோக
காமுக னகப்பட்ட வாசையைம றப்பித்த
கால்களைம றக்கைக்கும் - வருமோதான்
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த - அரிமாயன்
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
கோணசயி லத்துக்ர - கதிர்காம
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
மேகலை யிடைக்கொத்தி - னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களில கப்பட்ட - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
9 |
645. மருவறா வெற்றி |
ராகம் - தாளம் - |
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த - தனதான |
பாடல் |
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு - மதனாலும்
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு - மதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த- மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க - வரவேணும்
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர - மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி - லுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை - மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
10 |
646. மாதர்வசம் |
ராகம் - குந்தல வராலி தாளம் - அங்கதாளம் (7) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகதிமிதக - 3 |
தானதன தானத் - தனதான |
பாடல் |
மாதர்வச மாயுற் - றுழல்வாரும்
மாதவமெ ணாமற் - றிரிவாரும்
தீதகல வோதிப் - பணியாரும்
தீநரக மீதிற் - றிகழ்வாரே
நாதவொளி யேநற் - குணசீலா
நாரியிரு வோரைப் - புணர்வேலா
சோதிசிவ ஞானக் - குமரேசா
தோமில் கதிர்காமப் - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
11 |
647. முதிரு மார |
ராகம் - தாளம் - |
தனன தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த - தனதான |
பாடல் |
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற - கடலாலே
முடிவி லாத தோர் வடக்கி லெயு மால மார்பி டத்து
முழுகி யேறி மேலெ றிக்கு - நிலவாலே
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
வினைவி டாத தாய ருக்கு - மழியாதே
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
விகட மாதை நீ யணைக்க - வரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர - மயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொ ருத்தி - மணவாளா
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச கத்தை - யருள்வோனே
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
12 |
648. வருபவர்கள் ஓலை |
ராகம் - பீம்பளாஸ் தாளம் - அங்கதாளம் (5 1/2) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த - தனதான |
பாடல் |
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று - தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து - அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து - விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன் - முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த - குமரேசா
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்த - கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர் சடை யாளர் தந்த - முருகோனே
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
13 |
மேலே செல்க
முன்பக்கம்
|
|
|