அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் |
ஊதிமலை |
611. ஆதிமகமாயி |
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - அங்கதாளம் (5 1/2) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த - தனதான |
பாடல் |
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த - குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க - அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க - ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு - மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க - வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த - வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் - வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த - பெருமாளே. |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
1 |