அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
சோலை மேவிய குன்று (பழமுதிர்ச்சோலை)
516. வஞ்சமே கோடி
ராகம் -
தாளம் -
தந்தனா தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான தானன - தனதான
பாடல்
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணா ரார வாரமு - மருள்வோராய்

வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு - விலைமாதர்

பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு - மெலியாதே

பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை - யருள்வாயே

அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் - சிறைமீள

அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர - முதல்வோனே

கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ் - புதல்வோனே

கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

1307. அகரமுமாகி
ராகம் - சிந்துபைரவி / பூர்வகல்யாணி
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி - 2, தகிட - 1 1/2
தனதன தான தனதன தான தனதன தான - தனதான
பாடல்
அகரமு மாகி யதிபனுமாகி யதிகமு மாகி - அகமாகி

அயனெய வாகி அரியென வாகி அரனென வாகி - அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி - வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி - வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் - வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம - முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு - மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 2

1308. இலவிதழ்
ராகம் -
தாளம் -
தனதன தான தான தனதன தான தான தனதன தான தான - தனதான
பாடல்
இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி - மிகவாதுற்

றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால இணைமுலை மார்பி லேற - மதராஜன்

கலவியி லோடி நீடு வெகுவித தாக போக கரணப்ர தாப லீலை - மடமாதர்

கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனுமீது கருதிய ஞான போத - மடைவேனோ

கொலைபுரி காளி சூலி வயரவி நீலி மோடி குலிச குடாரி யாயி - மகமாயி

குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி குணவதி யால வூணி - யபிராமி

பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி - புதல்வோனே

படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 3

1309. காரணமதாக
ராகம் - ஹம்ஸத்வனி
தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தகதிமிதக - 3
தானதன தான தந்த - தனதான
பாடல்
காரணம தாக வந்து - புவிமீதே

காலனணு காதி சைந்து - கதிகாண

நாரணனும் வேதன் முன்பு - தெரியாத

ஞானநட மேபு ரிந்து - வருவாயே

ஆரமுத மான தந்தி - மணவாளா

ஆறுமுக மாறி ரண்டு - விழியோனே

சூரர்கிளை மாள வென்ற - கதிர்வேலா

சோலைமலை மேவி நின்ற - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 4

1310. சீலமுள தாயர்
ராகம் - ஸிம்மேந்திரமத்யமம்
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த - தனதான
பாடல்
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு - தடுமாறித்

தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று - தெருவூடே

வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை - மெலியாமல்

வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு - புரிவாயே

சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் - மணிமேடை

சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற - திறல்வீரா

ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை - களிகூர

ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 5

1311. வீரமதனூல்
ராகம் -
தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த - தனதான
பாடல்
வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
வேல்விழியி னான்ம யங்கி - புவிமீதே

வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
வேலைசெய்து மால்மி குந்து - விரகாகிப்

பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
பாதகனு மாகி நின்று - பதையாமல்

பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
பாதமலர் நாடி யெறு - பணிவேனோ

பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்
பூவையரு ளால்வ ளர்ந்த - முருகோனே

பூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த
பூவைவடி வானு கந்த - மருகோனே

சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
தூள்கள்பட நீறு கண்ட - வடிவேலா

சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
சோலைமலை மேல மர்ந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 6

1312. வாரண முகங்கிழிந்து
ராகம் -
தாளம் -
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த - தனதான
பாடல்
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
மால்வரை யசைந்த நங்கன் - முடிசாய

வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த
மாதவ மறந்து றந்து - நிலைபேரப்

பூரண குடங்க டிந்து சிதகள பமட்பு னைந்து
பூசலை விரும்பு கொங்கை - மடவார்தம்

போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
பூசனைசெய் தொண்ட னென்ப - தொருநாளே

ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு - நிறைவீதி

ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு - குறைசேரத்

தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்ட பங்கள் - ரவிபோலச்

சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 7

1313. ஆசை நாலுசதுர
ராகம் - பீம்பளாஸ்
தாளம் - அங்கதாளம் (9)
தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தக - 1
தகிட - 1 1/2, தக - 1, தகிட - 1 1/2, தக - 1
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன - தந்ததான
பாடல்
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு - மிந்துவாகை

ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநூறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் - விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு - நந்தியூடே

ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை - யின்றுதாராய்

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்கு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண - செங்கையாளி

வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை - தந்தவாழ்வே

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் - செந்தில்நாகை

காழி வேளூர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் - தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 8

1314. கருவாகியெதாய்
ராகம் -
தாளம் -
தனனாதன தானன தத்தன
தனனாதன தானன தத்தன
தனனாதன தானன தத்தன - தனதான
பாடல்
கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி - நரைமாதர்

கையிலேவிழ வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினி - லினிதாகித்

தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனை - நினையாத

சதுராயுன தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ - தொருநாளே

செருவாயெதி ராமசு ரத்திரள்
தலைமூலைக ளோடுநி ணத்தசை
திமிர்தாதுள பூதக ணத்தொடு - வருபேய்கள்

திகுதாவுண வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட்
சிலகூகைகள் தாமுந டித்திட - அடுதீரா

அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரண மாதுத னைத்திகழ்
அளிசேர்குழல் மேவுகு றத்தியை - அணைவோனே

அழகானபொன் மேடையு யர்த்திடு
முகில்தாவிய சோலைவி யப்புறு
அலையாமலை மேவிய பத்தர்கள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 9

1315. சீர்சிறக்கு மேனி
ராகம் -
தாளம் -
தானதத்த தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன - தனதானா
பாடல்
சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென - வருமானார்

சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
தேடியொக்க வாடி யையோ வையோ வென - மடமாதர்

மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
மாமசக்கி லாசை யுளோ முளோ மென - நினைவோடி

வாடைபற்று வேளை யடா வடா வென
நீமயக்க மேது சொலாய் சொலா யென
வாரம்வைத்த பாத மிதோ இதோ என - அருள்வாயே

பாரத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொடித்டத நாளில் வரைஇ வரைஇ பவர்
பானிறக்க ணேசர் குவா குவா கனர் - இளையோனே

பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
மாமு நிக்கு காதி லுணார் வுணார் விடு
பாசமற்ற வேத குரூ குரூ பர - குமரேசா

போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
போயறுத்த போது குபீர் குபீ ரென - வெகுசோரி

பூமியுக்க வீசு குகா குகா திகழ்
சோலைவெற்பின்ட மேவு தெய்வா தெய்வா னைதொள்
பூணியிச்சை யாறு புயா புயா றுள - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 10

மேலே செல்க

1316. துடிகொள் நோய்
ராகம் - சங்கராபரணம்
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தனன தான தான தத்த
தனன தான தான தத்த
தனன தான தான தத்த - தனதான
பாடல்
துடிகொ ணோய்க ளோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இரும லீளை வாத பித்த - மணுகாமல்

துறைக ளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமு ளாநு பூதி பெற்று - மகிழாமே

உடல்செய் கோர பாழ்வ யிற்றை
நிதமு மூணி னாலு யர்த்தி
யுயிரி னீடு யோக சித்தி - பெறலாமே

உருவி லாத பாழில் வெட்ட
வெளியி லாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்ம - முறுவேனோ

கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி - யிகலூர்போய்க்

களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற
அவனை வாளி யால டத்தன் - மருகோனே

முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவ தாக ஆடு நிர்த்த - மயில்வீரா

முநிவர் தேவர் ஞான முற்ற
புநித சோலை மாமலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 11

1317. பாசத்தால் விலை
ராகம் -
தாளம் -
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன - தனதான
பாடல்
பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
பாரப் பூத மொத்தத னத்திகள் - மிகவேதான்

பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
பார்வைக் கேமயலைத்தரு துட்டிக - ளொழியாத

மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்
மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள் - அதிமோக

வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள்
நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
மாயைக் கேமனம் வைத்தத னுட்டின - மலைவேனோ

தேசிக் கானக முற்றதி னைப்புன
மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்
சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் - மணவாளா

தேடிப் பாடிய சொற்புல வர்க்கித
மாகத் தூதுசெ லத்தரில் கற்பக
தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி - வருவோனே

ஆசித் தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி - படுவோனோ

டாரத் தோடகி லுற்றத ருக்குல
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
ஆதிச் சோலை மலைப்பதி யிற்றிகழ் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 12

1318. வாதினை யடர்ந்த
ராகம் - சக்ரவாஹம் - குந்தலவராளி
தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த - தனதான
பாடல்
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து - தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து - பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று - தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப - தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து - திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று - தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து - எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 13

1319. வார்குழையை யெட்டி
ராகம் -
தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த - தனதான
பாடல்
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
மாயநம னுக்கு - முறவாகி

மாதவம ழித்து லீலைகள் மிகுத்து
மாவடுவை யொத்த - விழிமாதர்

சீருட னழைத்து வாய்கனிவு வைத்து
தேனித ழளித்து - அநுபோக

சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
சீர்மைகெட வைப்ப - ருறவாமோ

வாரினை யறுத்து மேருவை மறித்து
மாகனக மொத்த - குடமாகி

வாரவணை வைத்து மாலளித முற்று
மாலைகளு மொய்த்த - தனமாது

தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
தோகையுமை பெற்ற - புதல்வோனே

சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
சோலைமலை யுற்ற - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 14

1320. அழகு தவழ்குழல்
ராகம் -
தாளம் -
தானன தனதன தனத்தத் தாத்த
தானன தனதன தனத்தத் தாத்த
தானன தனதன தனத்தத் தாத்த - தனதான
பாடல்
அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி
அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி - யநுராக

அவச இதமொழி படித்துக் காட்டி
அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி - யணியாரம்

ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி
எழுத வரியிடை வளைத்துக் காட்டி
உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி - யுறவாடி

உருகு கடிதட மொளித்துக் காட்டி
உபய பரிபுர பதத்தைக் காட்டி
உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட - மொழிவேனோ

முழுகு மருமறை முகத்துப் பாட்டி
கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு - முனிநாடா

முடுகு முதலையை வரித்துக் கோட்டி
அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட - முதுநீதர்

பழைய கடதட முகத்துக் கோட்டு
வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு - பரமேசர்

பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
குமர குலமலை யுயர்த்திக் காட்டு
பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 15

1321. தலைமயில் கொக்கு
ராகம் - யமுனா கல்யாணி (மத்யம ஸ்ருதி)
ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தத்தத் - தனதானா
பாடல்
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் - தடுமாறித்

தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனம் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் - பலகாலும்

திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் - டுயிர்போமுன்

திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக் - கருள்தாராய்

கரணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகுந டத்தித் திட்டென எட்டிப் - பொருசூரன்

கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் - பொருகோவே

சூலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் - றிரிவோனே

கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
குலகிரி யிற்புக் குற்றுரை யுக்ரப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 16

1322. மலரணை ததும்ப
ராகம் -
தாளம் -
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான - தனதான
பாடல்
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
மணபரி மளங்கள் வேர்வை - யதனோடே

வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக - இளநீரின்

முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட
முகமுகமொ டொன்ற பாய - லதுனூடே

முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
முடிவடிவொ டங்கை வேலு - மறவேனே

சிலைநுத லிளம்பெண் மோகி சடையழகி யெந்தை பாதி
திகழ்மர கதம்பொன் மேனி - யுமைபாலா

சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக
திகழயி லெறிந்த ஞான - முருகோனே

கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை - யணிமார்பா

கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 17

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com